Tuesday, April 24, 2018



                                படித்தவர்களின்  குணம் எப்படி இருக்கவேண்டும்

இன்று பல மெத்த படித்த மேதாவிகள் தான் பல குற்றங்களை செய்து கொண்டுள்ளார்கள்.
உண்ணும் உணவில்கூட பல விஷமுள்ள இரசாயன பொருட்களை கலந்து பணத்திக்காக
மக்களின் உயுரில்கூட விளையாடுகிறார்கள்.
மிக பெரிய படிப்பை படித்த மருத்துவர்கள் ,எத்தனை மக்களை ஏமாற்றி பிழைப்பை
நடத்தி கொண்டுள்ளார்கள்.
படித்த அரசு அதிகாரிகள் தினமும் எத்தனை பேரை ஏமாற்றி வயுறு வளர்த்து கொண்டுள்ளார்கள்.
வக்கில்கள் என்ற போர்வையுள் எத்தனை குற்றவாளிகள் உள்ளனர்.
இவர்கள் மனிதர்களா அல்லது மனிதன் என்ற உடம்பில் உள்ள மிருகங்களா என்று தெரியவில்லை.
எவ்வளவு படிப்பு படித்தாலும் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று 
நமது அய்யன் திருவள்ளுவர்
கீழ் கண்ட குறள் மூலம் நமக்கு விளக்குகிறார்.

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை."

விளக்கம்:
எவரொருவர் மற்றவர்கள் படும் கஷ்டத்தை   தன்னுடைய கஷ்டமாக கருதி செயல் படவில்லையோ அவர் எவ்வளவு படித்திருந்தாலும் அதனால் பயனில்லை.

Thursday, April 19, 2018

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்

இவுலகத்தில் நடக்கும் அனைத்து செயல்களும்,இறைவனின் அருளால் நடக்கிறது.

மக்கள் தங்களால்தான் ஒவ்வொரு செயலும் நடக்கிறது என்று எண்ணுகிறார்கள்.

இறைவன் என்ற மாபெரும் சக்திதான் இப்வுலகை வழி நடத்தி செல்கிறது.

நாம் உள்ளே இழுக்கும் மூச்சு காற்று வெளியே வந்தால் தான் நாம்உயுரோடு இருக்கிறோம் என்று அர்த்தம்.உள்ளேயே நின்று விட்டால் உயுரோடு இல்லை என்று அர்த்தம்.
நம் மூச்சே நம் வசத்தில் இல்லை எனும்பொது இவ்வுலகை எப்படி நம் சக்தியுனால் கட்டுபடுத்த முடியும்.

இறைவன் என்பவன் ஒரு மாபெரும் சக்தி.
இறைவன் என்பவன் இவ்வுலகில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்.

எப்பொழுதும் நம்மிடம் இருந்து நம்மை வழி நடத்தும் இறைவனிடம்நாம் நன்றியுடன் இருப்போம்.